திராவிட மொழிகளில் முதன்மையான மொழியாக விளங்குவது தமிழ். தமிழகத்தில் மட்டுமல்லாது, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் முக்கியமான மொழியாக இது விளங்குகிறது. தமிழ் இலக்கணம், இலக்கிய வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. இதில் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள்.