பார்மஸி படிப்பு என்பது உடல் நலம் தொடர்பான படிப்பாகும். மருந்து மற்றும் மாத்திரைகளை கவனமாக கையாள கற்பிக்கப்படும். இந்தியாவில் பல்வேறு கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. சிறப்பான துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு பார்மஸி படிப்பு நிச்சயம் நல்ல தேர்வாக இருக்கும்.
பார்மஸி படிப்பு படிக்க பிளஸ் 2வில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலையில் தேர்ச்சி சதவீத விகிதம் வேறுபடும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த சதவீதத்தில் தளர்வுகளும் உண்டு.
ஒரு சில கல்லூரிகளில் இதற்கென தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பார்மஸி துறை என்பது மிகப்பெரிய துறையாகும். மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவமனைகளில் இப்படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. அரசு நிறுவனங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். இப்படிப்பில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. மாணவ, மாணவியர் அவரவர் விருப்பத்திற்கேற்ப சிறந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும்.