மனிதவள முன்னேற்றத்திற்கு திட்டமிடுவதற்கும், அதற்கு தேவையான தகவல்களையும் மற்றும் திறமையை வெளிப்படுத்துவதற்கும் இந்த டிப்ளமோ படிப்பு உதவுகிறது. மேலும் தொழிற்சாலைகளில் முதலாளி, தொழிலாளர்கள் இடையே நல்லுறவை வளர்க்கவும் செய்கிறது. மனிதவள துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இதனுடைய முக்கிய நோக்கம் தொழிலாளார்களின் அனைத்து விதமான சூழ்நிலைகளையும் , தொழிலதிபர்களின் நடவடிக்கை பற்றி அறிந்து கொள்வதுடன், சில தொழிற்சாலைகளில் ஏற்படும் தவிர்க்க இயலாத சிரமங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது.