இன்றைய சூழலில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்ளத்தக்க நிலை இல்லை. ஆரம்பத்தில் சிறந்த நிபுணர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது வளர்ச்சியடைந்த கதிரியக்கத்துறை காரணமாக ரத்தக்குழாய் அடைப்பு முதலான நோய்களை முன்பாகவே கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறுகின்றனர். இந்த டிப்ளமோ படிப்பானது கதிரியக்கத்துறையில் தத்துவங்களையும், வேலைகள், நவீன வளர்ச்சிகள் பற்றி தெரிந்து கொள்வதுடன், நோயாளிகளை எப்படி கதிர்வீச்சுக்கு உட்படுத்துவது என்ற முறைகளையும் கற்றுத்தருகிறது.