தமிழ் படித்தவர்களின் வேலைவாய்ப்பின்மையை கவனத்தில் கொண்டு கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பை உருவாக்கியுள்ளது. மக்கள் தொடர்பு மீடியாக்களில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், சுயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த படிப்பு பயிற்சி அளிக்கிறது. மேலும், நூல்கள் பதிப்பித்தல், தமிழில் டைப் செய்தல் போன்றவையும் கற்றுத் தரப்படுகின்றன.