யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்ட யோக சூத்திரத்தில் யோக முறைகளின் மூலம் மனம் மற்றும் உடல் நலத்தைப் பேணுவதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. யோகா குறித்த விழிப்புணர்வு தற்போது பெருகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சியை மேற்கொள்கின்றனர். யோகாசனங்கள் குறித்த விளக்கங்கள், மூச்சுப்பயிற்சி முறைகள் போன்றவை பற்றிய பயிற்சிகளை இந்த டிப்ளமோ மூலம் கற்றுக் கொள்ள முடிகிறது.