காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் சுவாசக் கோளாறும் பெருகி வருகிறது. சுவாசக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பது சுவாசக் கோளாறு சிகிச்சைப் பணியாளர்களின் பணியாகும். நோயாளிகளின் நுரையீரல்கள் செயல்படும் விதம், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் பரிமாற்றத்திறன் போன்றவற்றை அளவிடுதல் இவர்களின் வேலை. ரத்தத்தில் ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்துவதற்கேற்ற நிலையில் நோயாளி இருக்கிறாரா என்பதை அறிந்து அவரை தயார்படுத்துவது, நுரையீரலின் செயல்திறனை அறியப் பயன்படும் கருவிகளைக் கையாளுதல் போன்றவையும் இவர்களுடைய பணிகள் தான். இவற்றை விளக்கமாக கற்றுக் கொள்ள இந்த டிப்ளமோ உதவுகிறது.