எல்.எல்.எம். என்ற முதுகலை சட்டப்படிப்பின் ஒரு பிரிவுதான் கிரிமினல் லா அன்ட் கிரிமினல் அட்மினிஸ்ட்ரேஷன்.
இப்படிப்பை இந்தியாவில் ஒரு சில சட்டக் கல்லூரிகளே வழங்குகின்றன. இளநிலை சட்டப்படிப்பான எல்.எல்.பி. முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். சட்டப்படிப்பை அளிக்கும் கல்வி மையங்கள் பலவும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. எல்எல்.பி. பட்டப்படிப்பில் படித்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த நுழைவுத் தேர்வு அமையும்.
இதில் குற்றச்செயலுக்கான சட்டம் மற்றும் குற்றவாளிகளை நிர்வகிப்பது குறித்து சட்டம் கூறும் பிரிவுகள் பற்றி முழுமையாக கற்பிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பை முடித்தவர்கள் குற்றவியல் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
எல்.எல்.எம். கிரிமினல் லா அன்ட் கிரிமினல் அட்மினிஸ்ட்ரேஷன் முடித்தவர்கள் வழக்கறிஞராக பயிற்சி எடுத்து பிறகு வழக்கறிஞர் பணிக்குச் செல்லலாம்.
இந்தியாவில் பல்வேறு சட்டக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரியில் இப்படிப்பை படிப்பது மாணவர்களுக்கு சிறந்தது.
எல்.எல்.எம். படிப்பிற்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும்.