இந்தியா, உலகத்தின் வரலாறை அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் எம்.ஏ. வரலாறு பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். உலகின் முந்தைய வரலாறு நிகழ்வுகளை பற்றி விரிவாக, இந்த துறையில் விளக்கப்படுகிறது. அதில் ஒரு துறை தான் சமூகவியல் பிரிவாகும்.
இதுபோன்ற பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு எம்.பில் மற்றும் பி.எச்டி. படிப்புகளை தொடரலாம். நல்ல பணி வாய்ப்புகள் கிடைப்பதுடன் நல்ல பதவிகளில் அமரலாம்.
தகுதி: எம்.ஏ., வரலாறு படிப்பில் சேர இளநிலை பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு வரலாற்று பாடப்பிரிவில் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பு 2 ஆண்டுகள் கொண்டதாகும். சில கல்வி நிறுவனங்கள் இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வையும் நடத்துகின்றன.
இந்த பாடப்பிரிவை வழங்கும் கல்லூரிகள்:
அமிதி பல்கலைக்கழகம், நொய்டா
அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை
அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வாரணாசி
குரு நானக் தேவ் பல்கலைக்கழகம், பஞ்சாப்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், டெல்லி
வேலைவாய்ப்புகள்:
வரலாறு படித்து முடித்த பிறகு இந்தப் பாடப்பிரிவிலேயே ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம். ஆசிரியர் பணியாற்றலாம். பல்வேறு துறைகளில் வரலாறு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆர்வம் மிக்கவர்கள் புத்தகம் எழுதுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
வரலாறு தொடர்பான பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பங்கேற்று மக்களுக்கு இந்தியாவின் வரலாறை விளக்கலாம். வெளிநாடுகளிலும் இத்துறையினருக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.