கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலை பட்டப்படிப்பாகும். பி.சி.ஏ. அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த முதுகலை படிப்பில் சேரலாம்.
கணினி மென்பொருள் உருவாக்கம் மற்றும் கணினி உதிரிப் பாகங்கள் வடிவமைப்பு போன்றவை இப்படிப்பில் கற்பிக்கப்படும். பொதுவாக இது 3 அல்லது 2 ஆண்டு கால படிப்பாகும். இந்தியாவில் பல்வேறு கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன.
இப்படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் நிபுணத்துவம் பெறும் வகையில் அமையும். கம்ப்யூட்டர் மென்பொருள் உருவாக்கத்தில் பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக பாடப்பிரிவு உள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. தனியார் மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள், கணினி உதிரிப் பாகம் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது. படித்து முடித்ததுமே உயர்ந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் படிப்புகளில் ஒன்றாக எம்.சி.ஏ. உள்ளது.