எல்.எல்.எம். என்பது முதுகலை சட்டப்படிப்பாகும். இதில் ஒரு பிரிவுதான் க்ரைம்ஸ் அன்ட் டோர்ட்ஸ். இப்படிப்பை ஒரு சில சட்டக் கல்லூரிகளே வழங்குகின்றன. இளநிலை சட்டப்படிப்பான எல்.எல்.பி. முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
இதில் குற்றங்கள், குற்றவாளிகள் பற்றி முழுமையாக கற்பிக்கப்படும். ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னணி ஆராய்தல், அதற்கான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, குற்றத்திற்கான தண்டனை ஆகியவை பாடப்பிரிவுகளாக உள்ளன.
இரண்டு ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பை முடித்தவர்கள் குற்றவியல் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
எல்.எல்.எம். கிரைஸ் அன்ட் டோர்ட்ஸ் முடித்தவர்கள் வழக்கறிஞராக பயிற்சி எடுத்து பிறகு வழக்கறிஞர் பணிக்குச் செல்லலாம்.
இந்தியாவில் பல்வேறு சட்டக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரியில் இப்படிப்பை படிப்பது மாணவர்களுக்கு சிறந்தது. எல்.எல்.எம். படிப்பிற்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும்.
ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் இந்த பட்டப்படிப்பை, ஒரு சில கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டுகளாகவும், ஒரு சில கல்வி நிறுவனங்கள் 3 ஆண்டுகளாகவும் அளிக்கின்றன.
கல்வி நிலையங்கள்
ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகம், ஆந்திரா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கோட்டயம், ககாடியா பல்கலைக்கழகம், வாரங்கல், குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருக்ஷேத்ரா, நல்சார் பல்கலைக்காகம், ஹைதராபாத், இந்தியன் லா இன்ஸ்டிடியூட், டெல்லி, பூனே பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் எல்.எல்.எம். பட்டப்படிப்பை வழங்குகின்றன.
பணி வாய்ப்பு
குற்றங்களுக்கு குறையே இல்லாத இந்த காலத்தில் குற்றவியல் படித்த வழக்கறிஞர்களுக்கும் பணி வாய்ப்பு சிறப்பாக அமையும்.