ஆப்தமாலஜி என்பது கண் தொடர்பான நோய்களை குணமாக்கும் மருத்துவ முறைகளை கற்பிக்கும் துறையாகும். கண்ணில் ஏற்படும் நோய்கள், அதை குணமாக்கும் மருத்துவ முறை முதல், கண் அறுவை சிகிச்சை வரை இந்த படிப்பு காலத்தில் கற்பிக்கப்படும். இப்படிப்பினை முடித்தவர் கண் சிறப்பு மருத்துவராகக் கருதப்படுவார்.
3 ஆண்டுகளைக் கொண்ட இந்த மருத்துவ மேற்படிப்பினை தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே இப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள். மேற்கொண்டு இத்துறையில் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் எம்.எஸ். ஆபத்மாலஜி படிப்பில் சேரலாம். சில பல்கலை/கல்லூரிகள் இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க தனியாக நுழைவுத் தேர்வினை நடத்துகின்றன.
வேலை வாய்ப்பு
எம்.எஸ். ஆப்தமாலஜி படித்தவர்கள் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவோ, தனியார் அல்லது அரசு மருத்துவமனையில் கண் மருத்துவராகவோ பணியாற்ற முடியும். தனியாக கிளினிக் துவக்கி கண் தொடர்பான நோய்களை குணப்படுத்தலாம்.
கல்வி நிறுவனம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்ட் ரிசர்ச், மீனாட்சி மெடிக்கல் காலேஜ், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், மதுரை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகியவை இப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களாகும்.