இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களும், சட்டக் கல்லூரிகளும் எல்.எல்.எம். மாஸ்டர் ஆப் லா எனப்படும் இளநிலை சட்டப்படிப்பை அளிக்கின்றன. இதனை கல்லூரியிலும், தொலைதூரக் கல்வி முறையிலும் மாணவர்கள் தேர்வு செய்து பயிலலாம்.
எல்எல்.எம். பட்டப்படிப்பு, தொழிலாளர் நலன், வணிகச் சட்டம், வங்கியியல், நிதியியல் சட்டம், சர்வதேசச் சட்டம், மனித உரிமைச் சட்டம், வரிச் சட்டம் என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் மாணவர்கள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம்.
ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் இந்த பட்டப்படிப்பை, ஒரு சில கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டுகளாகவும், ஒரு சில கல்வி நிறுவனங்கள் 3 ஆண்டுகளாகவும் அளிக்கின்றன.
கல்வி நிலையங்கள்
ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகம், ஆந்திரா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கோட்டயம், ககாடியா பல்கலைக்கழகம், வாரங்கல், குருசேத்ரா பல்கலைக்கழகம், குருக்சேத்ரா, நல்சார் பல்கலைக்கழகம், ஹைதராபாத், இந்தியன் லா இன்ஸ்டிடியூட், டெல்லி, பூனே பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் எல்.எல்.எம். பட்டப்படிப்பை வழங்குகின்றன.
வேலை வாய்ப்பு
குறிப்பிட்ட துறையைத் தேர்வு செய்து பயிலும் மாணவர்கள், அவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவிற்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். தற்போது பெரிய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், இதுபோன்ற தனித்துவம் பெற்ற சட்டப்படிப்பை படித்தவர்களை, தங்களது அன்றாட நடவடிக்கைகளை சீராக்கும் வகையில் பணிக்கு அமர்த்துகின்றன.