உயிர்வாழும் நுண்ணியிரிகளை உபயோகித்து பொருட்களை வடிவமைப்பது, தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்வை மேம்படுத்துவது, புதிய நுண்ணுயிரிகளை உருவாக்குவது போன்றவற்றைக் குறிப்பிட்ட உபயோகங்
களுக்காக பயன்படுத்தும் துறையே பயோடெக்னாலஜி துறை. உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படும் அறிவியலின் பிரிவே பயோடெக்னாலஜி. இந்த துறையில் மரபியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, இம்யூனாலஜி, வைராலஜி, வேதியியல், பொறியியல் போன்ற பல தரப்பட்ட பாடங்களையும் படிக்க வேண்டும். செல்களையும் பாக்டீரியாக்களையும் தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த
பயோடெக்னாலஜி உதவுகிறது. தற்போது பயோடெக்னாலஜி நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய தனிப் படிப்பாக பயோடெக்னாலஜியைப் படிப்பதே சிறந்தது.
கல்வி நிறுவனங்கள்
முதலில் கோல்கட்டாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தான் பயோடெக்னாலஜி துறைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. பின்னர் பயோடெக்னாலஜி பட்டப்படிப்பை டில்லி பல்கலைக்கழகம் தொடங்கியது. உயிர் அறிவியலில் ஐ.ஐ.டி.,க்களுக்கு சிறப்பான பின்புலம் இல்லையென்றாலும் பொறியியல் படிப்புகளில் அவற்றின் ஆழமான அணுகுமுறை இதற்குக் கைகொடுக்கிறது. இந்திய அரசின் பயோ
டெக்னாலஜித் துறையின் நிதியுதவியின் காரணமாக அரசுத் துறையிலுள்ள ஐதராபாத் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் போன்றவை இதில் சிறப்பான கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன.
படிப்புகள்
பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு என பல்வேறு படிப்புகள் இதில் உள்ளன. எனினும் எதிர்காலப் போட்டிச் சூழலை நாம் எதிர்கொள்ள இந்தப் படிப்புகள் மட்டுமே போதாது. குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு
காலமாவது இத்துறைப் படிப்புகளை மேற்கொள்வதே நல்ல எதிர்காலத்தைத் தரும். இதன் எம்.எஸ்சி., படிப்புக்கு உயிரியல் அல்லது அது தொடர்பான பிரிவில் பட்டப்படிப்பு பயின்றவர்கள் தகுதியானவர்கள். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு எழுதித்தான் இதில் சேர முடியும். தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளுக்கு சில நிறுவனங்கள் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.
இதில் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு கேட் தேர்வு அல்லது யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப்., அல்லது சி.எஸ்.ஐ.ஆர்., தேர்வு அல்லது ஜ.சி.எம்.ஆர்., மதிப்பெண் தேவைப்படும். ஐ.ஐ.எஸ்.சி., கல்வி நிறுவனம் பி.எஸ்சி., முடித்தவருக்கான, ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி படிப்பைத் தருகிறது.
வேலைவாய்ப்புகள்
இத்துறைப் படிப்பை முடிப்பவருக்கு பயோடெக்னாலஜி மற்றும் விவசாய பயோடெக்னாலஜி பிரிவுகளே அதிகப் பணி வாய்ப்புகளைத் தருகின்றன. இவற்றுள் மெடிக்கல் பயோ டெக்னாலஜி துறையே 70 சதவீத வருமானத்தைத் தருவதாக உள்ளது. டாக்டர் ரெட்டிஸ் லேப், ரான்பாக்சி, வொக்கார்ட், சாந்தா பயோடெக், பாரத் பயோடெக் போன்றவை இத்துறையின் முன்னணி வேலை வாய்ப்பு நிறுவனங்கள். பயோகான் இந்தியா நிறுவனமும் பணி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அவெஸ்தா ஜென் நிறுவனமும் அதிக வாய்ப்புகளைத் தருகிறது. பயோ பியூவல், சர்க்கரை ஆலை, டிஸ்டிலரிஸ், இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி பிரிவுகளிலும் இதற்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன.