எம்.எஸ்சி. புள்ளியில் பாடப்பிரிவை நேரடி வகுப்புகளாகவும், தொலைதூரக் கல்வி முறையிலும் படிக்கலாம்.
பி.எஸ்சி. புள்ளியியல் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். தற்போது இப்படிப்பிற்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு இல்லை. எனினும், அதிக வேலை வாய்ப்புகளைக் கொண்ட படிப்பாகவும், வருங்காலத்தில் அதிக மாணவர்களால் விருப்பப்படும் படிப்பாகவும் இது உள்ளது.
உற்பத்தி திறனாளிகளின் தரமறிதல், கூறு எடுத்தல், மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பரிசோதனை, உயிரியல் பரிசோதனைகள், சுற்றுச்சூழல் கல்வி, பொருளாதார ஆய்வுகள், கல்வி, சமூக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை கற்பித்து திறன் வாய்ந்த மாணவர்களை உருவாக்குவதே இப்படிப்பின் நோக்கமாகும்.
மத்திய புள்ளியியல் கூட்டமைப்பு, தேசிய மாதிரி கணக்கீட்டு நிறுவனம், காப்பீட்டுத் துறை போன்றவற்றில் ஆய்வாளர் பணிகளில் சேரலாம். இதுபோன்ற துறைகளில் பெரிய பதவிகளில் பணியாற்றும் வாய்ப்பும் ஏற்படும்.