பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
செயற்கைக்கோள், ராக்கெட், ஏவுகணை போன்றவற்றை உருவாக்குவது, ஏவுவது பற்றிய படிப்பை வழங்குவத ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் துறையாகும். இது தற்போத பல்வேறு நவீன மாற்றங்களுடன் ஏரோஸ்பேஸ் இன்ஜினிரியங் என்று மாற்றப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.
சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, கான்பூர் ஐஐடி, கோவை அமிர்தா பல்கலைக்கழகம், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று அதில் எடுக்கும் மதிப்பெண் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.