விவசாயப் பயன்பாட்டில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் பணி வேளாண் பொறியாளர்களுடையது. வேளாண் துறைக்குத்த தேவையான கருவிகள், இயந்திர சாதனங்கள், அறுவடை சாதனங்கள், பாசனக் கருவிகள் போன்றவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் போன்ற பணிகள் வேளாண்மை பொறியியல் மாணவர்களுக்கு உரியது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் புராசசிங் நிறுவனங்கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட வேளாண் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உண்டு.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலை படிக்க வாய்ப்புகள் உள்ளன.