பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் மதிப்பெண்ணையும் அடிப்படையாக வைத்து இப்படிப்பிற்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும், ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு காணும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதற்காக மாணவர்களை தயார் படுத்தும் படிப்பு இது. அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு விவசாய உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதாகும்.
விவசாய நாடான இந்தியாவில் இப்படிப்பிற்கு எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. படிப்பை முடித்தவர்களுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் இப்படிப்பை அளிக்கிறது.