இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஹோமியோபதிக் மருத்துவ முறையைப் பற்றி கற்பிக்கும் படிப்பாகும் இது. உடலின் நோய் தன்மையை கண்டறிந்து அதனை குணப்படுத்த மாத்திரைகளை வழங்கும் ஹோமியோபதிக் மருத்துவம் பக்க விளைவுகள் அற்றது என்பதால் இதனை நாடுவோர் அதிகம். இதனால் இப்படிப்பிற்கும் எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இப்படிப்பில் பயிற்சி வகுப்புகளும் உள்ளன. சில பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வி முறையிலும் இப்படிப்பு வழங்கப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் அரசு ஹோமியோபதிக் மருத்துவக் கல்லுரியும், நேரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி-டெல்லி, திருமதி சந்தாபென் மொஹன்பாய் பட்டேல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கல்கட்டா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை இப்படிப்பை வழங்குகின்றன.
கல்வித் தகுதி
இயற்பியல், வேதியியல், உயிரியியல், ஆங்கிலம் பாடங்களை எடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்வி நிறுவனங்கள் இதற்காக தனியாக நுழைவுத் தேர்வினை நடத்துகின்றன. இயற்கை மருத்துவ முறையின் மீது நாட்டம் உள்ள மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். இதேத் துறையில் மேற்படிப்பும் படிக்கலாம்.
வேலை வாய்ப்பு
அலோபதி மருத்துவத்தில் உள்ள பக்க விளைவு, குணமடையாத பல நோய்களுக்கு ஹோமியோபதி முறையில் நல்ல தீர்வு உள்ளது. இதனால் எப்போதுமே பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. ஹோமியோபதி கிளினிக், மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் இப்பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை முடித்தவுடன் மருத்துவராகவோ, ஆலோசகராகவோ, மருந்தாளுனராகவோ, ஆய்வாளராகவோ, கல்வியாளராகவோ உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.