பி.எட். படிப்பில் சேர பள்ளியில் படித்த ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பாடங்களை எடுத்து இளநிலை/முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் எடுத்திருக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து கலந்தாய்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளியில் ஆசிரியர் பணியாற்றுவதற்கான அனைத்து திறமைகளையும் வளர்க்கும் வகையில் இந்த படிப்பு அமையும். வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்லாமல், ஆசிரியருக்குத் தேவையான திறமைகளை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம். ஒன்று முதல் 2 ஆண்டுகளைக் கொண்டதாக இப்படிப்பு உள்ளது.
இப்படிப்பை முடித்தவர்கள் உயர்நிலை மற்றும் உயர் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.
கல்வி நிலையம்
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பல கல்வியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் சேர்க்கை பெறலாம். நிர்வாக ஒதுக்கீட்டிலும் சேர்ந்து படிக்கலாம்.