அறிவியல் பூர்வமாக மனிதகுல வரலாற்றை அறிந்து கொள்வதே மானுடவியல். மனிதனின் உயிரியல், மொழியியல், சமூகம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி காலவரிசைப் படி மானுடவியல் ஆராய்கிறது. இப்படிப்பு சமூக அறிவியலின் விரிவான ஒரு பிரிவாக இருந்தபோதிலும், இப்படிப்பு நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அவை: தொல்லியல், உடலியல் மானுடவியல், பண்பாட்டு மானுடவியல் மற்றும் மொழியியல் மானுடவியல். தொல்லியல் துறை, வரலாற்றுத்துறை மற்றும் சமூகவியல் துறைகளில் வேலைவாய்ப்பு உண்டு.
படிப்பு காலம் மூன்று ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.
* ஐ.எஸ்.இ.சி., (சமூகம் மற்றும் பொருளாதார மாற்றம் படிக்கும் கல்விநிறுவனம்), பெங்களூரு இங்கு பிஎச்.டி.,பிரிவில் சோசியல் ஆந்த்ரபாலஜி படிப்பு வழங்கப்படுகிறது.
* உத்கல் பல்கலைக்கழகம், புவனேஸ்வர் இங்கு மானுடவியல் துறையில் எம்.ஏ.,, எம்.எஸ்.சி.,, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.
* புனே பல்கலைக்கழகம், புனே இக்கல்வி நிறுவனத்தில் மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை
நடைபெறும்.
* ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐதராபாத் இரண்டு ஆண்டு எம்.ஏ., ஒரு வருட எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,படிப்புகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன.
* சாம் ஹிக்கீன்பாதம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அலகாபாத் முன்னதாக, இக்கல்விநிறுவனம் அலகாபாத் வேளாண்மை கல்வி நிறுவனம் என அழைக்கப்படும். இங்கு மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது.
* மைசூர் பல்கலைக்கழகம், மைசூர் இப்பல்கலை.,யில் மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது.