பிளஸ் 2 முடித்ததும் பல மாணவர்களின் முதல் தேர்வாக மருத்துவம்தான் இருக்கிறது. 5 ஆண்டுகாலம் கொண்ட இந்த படிப்பினை அரசு மற்றும் சில சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அளிக்கின்றன. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி நடத்துகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் மனித உடல் தொடர்பான அனைத்து விவரங்களும், அதில் உருவாகும் நோய்கள், நோய்க்கான மருந்துகள் என அனைத்தும் கற்பிக்கப்படும். ஐந்து ஆண்டுகால படிப்பில், வகுப்பறையில் நடத்தும் பாடமும், பயிற்சி வகுப்புகளும் அடங்கும்.
எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றலாம். சொந்தமான கிளினிக் நடத்தலாம். வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்கலாம்.
எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் குழந்தை, மகப்பேறு, நரம்பியல் என பல்வேறு துறைகளில் முதுகலை படிப்பு முடித்தால் சிறப்பு மருத்துவர் அந்தஸ்தை அடையலாம்.