பேச்சுலர் ஆப் ஆர்கிடெக்சர் என்ற பி.ஆர்க். படிப்பு 5 ஆண்டுகளைக் கொண்ட இளநிலை பட்டப்படிப்பாகும். கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டது இப்படிப்பு. கட்டடத்தை வடிவமைத்தல், தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ற வகையில் உருவாக்குதல் போன்ற பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கும். இப்படிப்பினை படிக்க விரும்பும் மாணவர்கள், வரைதல், எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் இருக்க வேண்டும். கணிதம், கேட், பொருளாதாரம், கட்டடக்கலையின் வரலாறு, உள் அலங்காரம் போன்ற பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படும்.
பிளஸ் 2 படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். சில கல்லூரிகளில் இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. அது குறித்து விழிப்புணர்வு வேண்டும். பி.ஆர்க். முடித்தவர்கள், மேற்கொண்டு எம்.டெக். படிப்பில் என்விரான்மென்ட் பிளானிங், இன்ப்ராஸ்ட்ரக்சர் பிளானிங், அர்பன் அன்ட் ரீஜினல் பிளானிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம். ஏராளமான சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
ஆச்சாரியா ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர், அண்ணா பல்கலைக்கழகம், அருள்மிகு மீனாக்ஷி அம்மன் பொறியியல் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, சத்யபாமா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன.
வேலை வாய்ப்பு
வளர்ந்து வரும் உலகில் குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களுக்காக புதிது புதிதாக கட்டடங்கள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். அதற்காக ஏராளமான ஆர்கிடெக்சர்கள் தேவைப்படுவார்கள். எனவே எதிர்காலத்தில் ஆர்கிடெக்சர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.