பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி என்பது இந்தியாவின் இயற்கை மருத்துவ முறைகளில் ஒன்றான ஹோமியோபதி மருத்துவ முறையை கற்பிப்பதாகும். உடலின் நோய்த் தன்மையையும், குணமாக்கும் திறனையும் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் குணமளிக்கும் முறைதான் ஹோமியோபதி. இது பொதுவாக ஐந்தரை ஆண்டுகள் கொண்ட படிப்பாகும்.
இந்தியாவில் சுமார் 118 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இளநிலை மருத்துவப் படிப்பான பி.எச்.எம்.எஸ். படிப்பில் சேர பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் மேற்கொண்டு படிக்க விரும்புபவர்கள் முதுகலை பட்டம் பெறலாம்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.
வேலை வாய்ப்பு
பி.எச்.எம்.எஸ். படித்து முடித்தவர்கள் தனியார், அரசு மருத்துவமனைகளிலும், கல்லூரிகளிலும் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறலாம். தனியாக கிளினிக் துவங்கலாம். இந்தியாவை விட தற்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அங்கும் மருத்துவமனைகளில் பணி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.