தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பெருகிவருகிறது. விவசாய உற்பத்தி, உணவு, மக்கள்தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்த துறை மேலும் முக்கியத்துவத்தை பெறும். விவசாயிகளுக்கும் விவசாய ஆய்வாளர்களுக்கும் உதவுவதற்காகவும், அவர்களின் சிக்கலை தீர்க்கவும், அக்ரிகல்சர் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் தகவல்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது கிராமப் புறங்களில் பல புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பேருக்கு விவசாயம் தான் தொழிலாக உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். கிராமங்களுக்கு தகவல்கள் சென்றடைய தொழில்நுட்பம் உதவுகிறது.
விவசாயத்திலும், கிராமப்புற முன்னேற்றத்திலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினைப் பற்றியும், விவசாயம் சந்திக்கும் பிரச்னை, அதை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும் மாணவர்கள் இந்த படிப்பில் அறிந்துகொள்கின்றனர். இந்த படிப்பில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், ஆப்ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங், டெவலப்மென்டல் எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க் அண்டு வில்லேஜ் ஏரியா நெட்வொர்க், பி.சி., அண்டு அப்ளிகேஷன்ஸ் இன் ரூரல் ஏரியாஸ், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்., மல்டிமீடியா டெக்னாலஜி, பார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம் அண்டு டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாடங்களை கற்றுத்தருகின்றனர்.
கோவை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.