உலகமயமாக்கல் கொள்கையினால் மேலாண்மை படிப்புகளுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. பிளஸ் 2 முடித்தவர்கள் மேலாண்மை தொடர்பான பணிகளில் ஈடுபட விரும்பினால் அவர்களுக்கு பி.பி.எம். நல்ல தேர்வாக இருக்கும்.
3 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்பினை பல்வேறு மேலாண்மை கல்லூரிகள் வழங்குகின்றன.
கல்வித் தகுதி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். பிளஸ் 2 அல்லாமல் அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
பொதுவாக பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து சேர்க்கை நடைபெறும். சில கல்லூரிகள் இதற்காக நுழைவுத் தேர்வையும் நடத்துகின்றன.
பிராஜெக்ட் மேனேஜ்மென்ட், இன்கம்டாக்ஸ், கம்ப்யூட்டர் பன்டமென்டல், வங்கியியல், சட்டம், வணிகச் சட்டம், கார்ப்பரேட் அக்கவுன்டிங், மனிதவள மேம்பாடு, ஆர்கனைசேஷன் பிஹேவியர், பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படும்.
பி.பி.எம். முடித்தவர்கள், மேற்கொண்டு எம்.பி.எம். படிக்கலாம். மாஸ்டர் ஆப் காமர்ஸ், மாஸ்டர் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ், மாஸ்டர் ஆப் பிசினஸ் ஸ்டடிஸ், டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எக்ஸிக்யூட்டிவ் எம்பிசி போன்ற படிப்புகளை படிக்கலாம்.
வேலை வாய்ப்பு
பிபிஎம் படிப்பினை முடித்தவர்கள் பொதுத்துறை நிறுவனங்கள், மல்டிநேஷனல் கம்பெனி, சந்தைப்படுத்துதல், தொழிற்நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஏற்றுமதி தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. பணியாற்றிக் கொண்டே தொலைதூரக் கல்வி முறையில் முதுகலை பட்டங்கள் பெற்று அவர்களது துறையில் உயரிய பதவிகளை அடையலாம்.