இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி இந்தி. இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் இந்தி பேசுகின்றனர். வடமாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் இந்த மொழி பேசப்படுகிறது. இந்தி பாடத்தில், பேச, எழுத மற்றும் படிக்க கற்றுத்தரப்படுகிறது. இலக்கியம் மற்றும் மொழித் திறன் வளர்க்கும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. உருது மொழிக்கும் இந்திக்கும் நல்ல தொடர்பு உண்டு என்றாலும் பஞ்சாபி, குஜராத்தி, வங்காளி மற்றும் நேபாளி போன்ற மொழிகளுக்கு லேசான தொடர்பு உண்டு. இத்தனை மொழிகளும் சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் தோன்றியவை என்பதால் இந்த ஒற்றுமை. கோடிக்கணக்கானோருக்கு தாய்மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் உள்ளதால் இந்தி பயின்றோர் வேலை வாய்ப்புப் பெறுவது எளிது.
இப்படிப்பு காலம் மூன்று ஆண்டு. இதே பிரிவில் முதுகலை உண்டு.