உணவுத் துறை என்பது இன்று மிகப்பெரிய துறையாக விளங்குகிறது. திறமையும், தகுதியும் உள்ள இளைஞர்களின் தேவை இந்த துறையில் பெருகிக் கொண்டே போகிறது. இந்த துறையில் போட்டி அதிகமாக இருப்பதால் புதுப்புது சிந்தனைகளை புகுத்துவதில் மாணவர்களுக்கு இந்தப் பட்டப்படிப்பின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் போன்ற விஷயங்களில் இந்த துறையை சேர்ந்தவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளனர். இதற்கேற்றவாறான தொழில் நுட்பங்களில் மாணவர்கள் கற்றுத்தரப்படுகின்றனர். உணவு நுண்ணுயிரியியல், உணவு தர உத்தரவாதம், உணவு நலம், உணவு வேதியியல், உணவு நடைமுறை போன்ற பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.