இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கியத்துறை எனப்படும் உயிர் தொழில்நுட்பம். விவசாயம், மருந்துப் பொருள்கள், பதனீட்டு உணவுகள், ஜவுளித்துறை... இப்படி இதன் பயன்பாடு விரிந்து வருகிறது. எனவே, இதுகுறித்த படிப்புகள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்தியாவிலும் பயோ டெக் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. பயோ டெக்னலாஜி படித்த மாணவர்களுக்கு பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சமீபகாலமாக விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.