திறமை வளர்த்துக்கொள்ள ஏதுவாகவும் சவால்களை எதிர்க்கொள்ளும் கல்வி முறையாகவும் இந்த கல்வி அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் எல்லோருக்கும் தேவைப்படும் கல்வியாக ஆங்கிலம் விளங்குகிறது. செயல் திறன் மேம்படுத்திக் கொள்ளவும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்கு தொடர்பை விரிவுப் படுத்தவும் தேவையானதொன்றாகி விட்டது.
தகுதி:இந்த மூன்று வருட படிப்பில் சேர பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பாடப்பிரிவை வழங்கும் கல்லூரிகள்:
இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யூனிவர்சிட்டி, டெல்லி
சர்தார் படேல் யூனிவர்சிட்டி, குஜராத்
அண்ணாமலை யூனிவர்சிட்டி, தமிழ்நாடு
எம்.எஸ்.பி மண்டல் டியோகிரி காலேஜ், மகாராஷ்டிரா