ரசாயன இன்ஜினியரிங் என்பது இயல் அறிவியல் (வேதியியல், இயற்பியல்) மற்றும் வாழ்வியல் (உயிரியல், நுண்ணுயிரியல், உயிர்வேதியியல்) தத்துவங்களுடன் கணிதமுறைகளை பயன்படுத்தி பயனற்ற மூலப்பொருட்கள் அல்லது வேதிப்பொருட்களை பயனுள்ள மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களாக மாற்றுவது தொடர்பாக படிக்கும் இன்ஜினியரிங் படிப்பாகும். இத்துறை வல்லுனர்கள் ரசாயன இன்ஜினியர்கள் என்று அழைக்கப்படுவர்.
நானோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்பங்கள், புதிய பயனுள்ள பொருட்கள் , பயனுள்ள உக்திகளை கண்டறிதலில் இத்துறை முன்னோடியாக விளங்குகிறது. பெரிய அளவிலான வணிக உற்பத்தியில் வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை வடிவமைத்தல், முன்னேற்றுதல் மற்றும் நிர்வகித்தல் போன்றவற்றில் இந்த ரசாயன இன்ஜினியரிங் துறையானது முழு வதும் ஈடுபடுகிறது. இத்துறையில் பணிபுரிபவர்கள் செயல்முறைசார் இன்ஜினியர்கள் என அழைப்பார்கள்.
வணிகம் சார்ந்து ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது, அதன் வேதிவினைகள் மட்டுமல்லாமல் உற்பத்திக்கு தேவையான ஆற்றல், மூலப்பொருட்களின் அளவு மற்றும் தன்மை, செலவுகள் என பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். இவற்றை பற்றி முழுமையாக இந்த இன்ஜினியரிங் பிரிவில் படிக்கலாம்.
ரசாயன இன்ஜினியரிங் துறையின் மூலம் கரிம மற்றும் கனிம வேதிப்பொருட்கள், பீங்கான் கற்கள், எண்ணெய்கள், பெட்ரோகெமிக்கல், வேளாண்மையில் பயன்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைகளை அழிக்கும் பொருட்கள், மீள்பொருட்கள், வெடி மருந்துகள், சோப்புகள் மற்றும் டிடர்ஜென்டுகள், வாசனைத்திரவியங்கள், மருந்துப் பொருட்கள், உணவில் சுவை கூட்டும் உணவுப் பொருட்கள், நிறமூட்டிகள் போன்றவை பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பயிலும் நிறுவனங்கள்
* அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை (தீதீதீ.ச்ணணச்தணடிதி.ஞுஞீத)
* ஐ.ஐ.டி.,சென்னை (தீதீதீ.டிடிtட்.ச்ஞி.டிண)
* ஐ.ஐ.டி.,புதுடில்லி (தீதீதீ.டிடிtஞீ.ச்ஞி.டிண)
* ஐ.ஐ.டி.,காரக்பூர் (தீதீதீ.டிடிtடுஞ்ணீ.ச்ஞி.டிண)
* என்.ஐ.டி.,திருச்சி (தீதீதீ.ணடிtt.ஞுஞீத)
* சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை (தீதீதீ.ண்ச்tடதூச்ஞச்ட்ச்தணடிதிஞுணூண்டிtதூ.ச்ஞி.டிண)
* கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை (தீதீதீ.ஞிடிtடிணஞீடிச்.ஞிணிட்)
* எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டான்குளத்தூர் (தீதீதீ.ண்ணூட்தணடிதி.ச்ஞி.டிண)
* கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, ஈரோடு (தீதீதீ.டுணிணஞ்த.ச்ஞி.டிண)
* புனித ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை (தீதீதீ.ண்tடீணிண்ஞுணீடண்.ச்ஞி.டிண)
வேலைவாய்ப்புகள்
இத்துறையில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, ரசாயன தயாரிப்பு தொடர்பான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. இது தவிர அணுமின் நிலையம், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள், உரம் உற்பத்தி தொழிற்சாலைகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பெட்ரோலியம் தயாரிப்பு நிறுவனங்கள், பயோடெக்னாலஜி தொடர்பான நிறுவனங்கள் போன்றவற்றில் பணியில் அமரலாம்.
கெமிக்கல் இன்ஜினியர்கள் ஆய்வுகள், வடிவமைத்தல், செயல்முறைகளை கட்டுப்படுத்துதல், உற்பத்தி, பொருளியல், நிருவாகம் போன்ற
பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவார்கள். இப்படிப்பை முடித்தவர்களில் நான்கில் மூன்று பங்கு மாணவர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இத்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் <உள்ள வேதிப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.