பயோ-டெக்னாலஜி இன்ஜினியரிங் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். இப்படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வது நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும். இது நான்காண்டு கால படிப்பாகும்.
பல முக்கிய கல்வி நிறுவனங்கள் மட்டுமே தற்போது பயோ டெக்னாலஜி படிப்பை வழங்கி வருகின்றன. இப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், கணிதம் எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களும், ஆராய்ச்சியில் ஈடுபடும் எண்ணம் உள்ள மாணவர்களும் பயோ-டெக்னாலஜி படிப்பை எடுத்து படிக்கலாம்.
வேலை வாய்ப்பு
பார்மாசூடிகல், உணவு மற்றும் மருந்து, வேதியியல், அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுக்கூட ஆராய்ச்சி, பயோ டெக்னாலஜி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டும். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பயோ-டெக்னாலஜி படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.