இன்றைய உலகில் கம்ப்யூட்டர் இன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை உருவாகி விட்டது. கம்ப்யூட்டர் அறிவு என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் அடிப்படை தேவையான ஒன்றாகிவிட்டது. இத்துறையில் உயர்கல்வி கற்பதன் மூலம் கைநிறைய சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதால் மாணவர்கள் இதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் ஹார்டுவேர் என்பது கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிய பாடப்பிரிவாகும். இதில் சர்க்யூட், மானிட்டர், கேபிள்கள், மின்சார கருவிகள், பிரிண்டர்கள் உள்ளிட்ட பாகங்கள் பற்றி கற்றுத்தரப்படுகிறது. சாப்ட்வேர் என்பது புரோகிராம், தகவல்கள், புரட்டக்கால் போன்ற கம்ப்யூட்டரின் ஆக்கப் பயன்பாடுகள் பற்றிய படிப்பாகும். கம்ப்யூட்டர்களை உருவாக்குவது, டிசைனிங் செய்வது, புரோகிராம்களை உருவாக்குவது போன்றவை பற்றிய படிப்பு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் எனப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.