பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் இன்ஜினியரிங். கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் சிவில் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இருப்பதால் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் இன்ஜினியர்கள் நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இப்போது திறமையான சிவில் இன்ஜினியர்களுக்கு தனியார் கட்டுமான தொழில் நிறுவனங்களிலும் வேலை கிடைத்து வருகிறது. சில ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு தனியே தொழில் நிறுவனங்களைத் தொடங்கி சிவில் என்ஜினியரிங் துறையில் வெற்றிகரமாக செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.