உலகின் செம்மொழிகளில் ஒன்றாக விளங்கும் அரபு மொழி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களால் தாய்மொழியாக விளங்குகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அரபு மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. எனவே இது அவர்களால் புனிதமொழியாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அரபு மொழியில் ஆர்வமுள்ளவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் படிப்பு அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பல மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளவர்களும் இந்த சான்றிதழ் படிப்பை கற்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.