இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, மனித உரிமை போன்றவற்றில் பெண்களின் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஆனால் தற்போது பெண்களின் பொருளாதார மேம்பாட்டில் சுய உதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல சுய உதவிக் குழுக்களில் இணைந்து பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். சுய உதவிக் குழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள தற்போது சான்றிதழ் படிப்பு வந்து விட்டது. உற்பத்தி, சேவைத்துறை, சிறு தொழில், தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றில் பெண்களுக்கான வாய்ப்புகள் பற்றிய விளக்கங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சுய உதவிக் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அவற்றுடன் இணைந்து பெண்கள் முனனேறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் இந்த சான்றிதழ் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.