ஆய்வுக்கூட நிபுணர்கள் ரத்தம், ரத்தத்தில் உள்ள அணுக்களை ஆராய்ந்து மருத்துவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் அளிப்பார்கள். இந்த படிப்பு, கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட சோதனைக் கூடத்தில், மைக்ரோஸ்கோப் உதவியுடன் உடல் திரவங்கள், ரத்தம் முதலியவற்றை ரசாயன ஆய்வில் ஈடுபடுத்தி, ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு செலுத்த முழு தகுதியுடன் உள்ளதா, நோயாளிக்கு செலுத்தப்பட்ட மருந்து ரத்தத்தில் கலந்து முன்னேற்றம் அளிக்கிறதா, ரத்த அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் உள்ளதா, என்று கம்ப்யூட்டர்கள் மூலம் ஆராய்வதில் பயிற்சியளிக்கிறது.