இந்தியாவில் நூலகத் துறை நவீனமயமாகி வருகிறது. இத்துறையில் பணி புரிபவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமாகி விட்டது. நூலக அறிவியல் படித்தவர்களுக்கும், நூலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் பயன்படும் விதத்தில் சான்றிதழ் படிப்பு உதவுகிறது. நவீனமயமான நூலகப்பணிகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பற்றிய அறிவைப் பெறவும், அதற்குரிய பயிற்சியை அடைவதற்கும் இந்த சான்றிதழ் படிப்பு பயன்படுகிறது. குறிப்பாக, எம்.எஸ்.ஆபீஸ், லினக்ஸ், கோகா போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. பாடப்புத்தகங்களுடன், சிடி மூலமாகவும் பாடங்கள் வழங்கப்படுகின்றன.