தற்போது சுவாச கோளாறால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து விட்டது. சுவாச கோளாறால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பிடல், நோயாளிகளை பராமரித்தல், சிகிச்சை அளித்தலில் உதவுதல் போன்ற பணிகளில் உள்ளவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பு உதவிகரமானதாக இருக்கும். இவர்கள் நோயாளிகளை சோதித்து, ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடு வாயுக்களின் செயல்பாடுகளை சரிபார்க்கின்றனர். அத்துடன் ரத்தத்தில் அசிடிட்டி அளவை அறியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயுவுக்கு நோயாளிகள் தயாராக இருக்கிறார்களா என்பதை சோதிப்பதும் இவர்களுடைய பணியாகும். நோயாளிகளின் சுவாசத்திறன் நவீன கருவிகளின் உதவியுடன் அளவிடப்படுகிறது. இந்த சான்றிதழ் படிப்பின் மூலம் இப்பணியில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.