இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த வழிகாட்டுதல் கல்வியை வழங்குகிறது. இந்த சான்றிதழ் கல்வியானது கீழ்க்கண்டவற்றை வழங்குகிறது.
அ) குழந்தைகளிடம் இருக்கக்கூடிய கல்வி மற்றும் பிற வித்தியாசமான திறமைகளையும் கண்டறிந்து அவற்றில் முன்னேற்றம் அடையச்செய்தல்.
ஆ) ஆரம்ப பள்ளி குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்து அவர்களிடம் சமூகம் சார்ந்த உணர்வுகளை வளர்த்தல்.
இ) குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொள்ளுதல்.
ஈ) பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெரியவர்களிடமும் குழந்தைகள் முன்னேற்றம் பற்றி எளிதாக எடுத்துக் கூறுதல்.
இந்த கல்வியானது பெற்றோர்கள்,ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆகியோர்களுக்கு தேவைப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் அல்லது மெட்ரிகுலேசன் தேர்ச்சி/ எஸ்.எஸ்.சி., அல்லது இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்ற பி.பி.பி., சான்றிதழ்.