காந்தியக் கொள்கைகள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பலரை ஈர்த்துள்ளன. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய தத்துவங்களையும் அறிந்து கொள்ள இந்த சான்றிதழ் படிப்பு உதவுகிறது. காந்தியின் கொள்கைகளை கற்பது தற்போதைய தேவையாகவும் உள்ளது. அகிம்சை, வன்முறை எதிர்ப்பு, அணு ஆயுதங்களை தடை செய்வது போன்ற விஷயங்களை தற்போது வலியுறுத்த வேண்டிய சூழல் உள்ளது. காந்தியக் கொள்கைகள் வெறும் தத்துவங்களாக மட்டும் தேங்கி விடாமல், நடைமுறைக்கும் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இந்த சான்றிதழ் படிப்பு கற்றுத் தரப்படுகிறது.