ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஒரு மாணவனின் வாழ்வில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி முக்கியமானது. இதுவே அவனுடைய எதிர்கால ஆளுமைத் திறன்களை முடிவு செய்கிறது. தொடக்கக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், சுமார் 5 வயது முதல் 12 வயது வரையிலான வயதுள்ள மாணவர்களை கையாள வேண்டியுள்ளனர். பொதுவாக எல்லா பாடங்களையும் கையாளும் திறன், பாடத்திட்டம் தயாரிப்பது, தேர்வு வைப்பது போன்றவற்றில் நல்ல செயல்திறன் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு அவசியம். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சான்றிதழ் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சி படிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.