இந்தியாவில் அதிகளவு மக்கள் அறிந்த மொழியான இந்தி மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இந்தோ-ஈரானிய துணைப்பிரிவைச் சேர்ந்தது. இந்தியாவின் ஆட்சி மொழியான இந்தி, பல மாறுபட்ட வடிவங்களில் பேசவும், எழுதவும் படுகிறது. இதன் எழுத்து வடிவம் தேவநாகரி அமைப்பைச் சேர்ந்தது. இதன் கிளைமொழிகள் மேற்கு இந்தி, கிழக்கு இந்தி என இரண்டு பிரிவாக உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 30 கோடி பேர் இந்தி மொழி பேசுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்தி மொழியின் அடிப்படை இலக்கணத்தை அறிந்து கொள்ள உதவியாக சான்றிதழ் படிப்புகள் உள்ளன.