குழந்தைகளிடம் கணிதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட செயல்முறை ரீதியான சான்றிதழ் கல்வியாகும். இந்த கல்வியானது தொடக்க கல்வி மற்றும் அதற்கு முந்தைய பள்ளி ஆசிரியர்கள், இளம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உதவுகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களிடம் கணிதம் கற்றுக் கொடுப்பதில் உள்ள சிரமங்களையும், குறைகளையும் சரி செய்வதே இதன் முக்கிய நோக்கம். ஆசிரியர்கள், மாணவர்களின் பின்புலம் அறிந்து, அவர்கள் கற்றுக்கொள்ளும் திறன் அறிந்து, கணிதத்தின் தேவைகளை எடுத்துக்கூறி, எளிதாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் பயிற்சியளிக்க உதவுகிறது.
தகுதி: 10ம் வகுப்பு தேறியவர்கள்/ஆரம்ப அல்லது தொடக்கநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லது ஏஎம்டி தேறியவர்கள்.