தற்போது என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு என்.ஜி.ஓ., நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதும், நிர்வகிப்பதும் மிகவும் சவாலான விஷயம். இந்நிறுவனங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், இவற்றை சிறப்பாக நிர்வகிக்கவும் உதவும் வகையிலான சான்றிதழ் படிப்புகளை சில கல்வி நிறுவனங்கள் தருகின்றன. தொழில்முறை சாந்த மற்றும் தரமான என்.ஜி.ஓ., மேலாண்மைத் திறனை வளர்க்க இந்த சான்றிதழ் படிப்பு உதவுகிறது. என்.ஜி.ஓ., மேலாண்மையின் முக்கிய கூறுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதும், செயல்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு இத்துறையில் சாதிப்பதற்கு அவர்களை தயார்படுத்துவதும் இந்த சான்றிதழ் படிப்பின் நோக்கமாகும்.