இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. இந்த பயிற்சிக்கு பிறகு தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள், அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்வதுடன், அது சம்பந்தமாக நுகர்வோர் கோர்ட்டுகளில் சென்று வழக்குகள் நடத்தவும் தெரிந்து கொள்வார்கள்.
தகுதி: 10 மற்றும் பிளஸ் 2 தேறியவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்ற பி.பி.பி., சான்றிதழ்.