தற்போது கிராமங்கள் நலிவடைந்து வருகின்றன. கிராமப்புற வளர்ச்சி இந்திய பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது. இதனால் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமான வளர்ச்சித் திட்டங்கள், வங்கிக் கடன்கள் போன்றவற்றைப் பற்றிய அறிவை இந்தப் படிப்பின் மூலம் பெறமுடிகிறது. கிராமப் புறங்களின் வளர்ச்சிப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.