சமூக அறிவியல் கல்வியின் பொருளாதார பிரிவின் ஒரு பகுதியாக வளர்ச்சியில் தொழிலாளர் எனும் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. அதாவது நிறுவனத்தின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கினை மேம்படுத்தும் விதத்தில் பாடத்திட்டங்களுடன் இந்த படிப்பு விளங்குகிறது. அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கல்வியறிவைப் புகட்டி, அவர்களை வளர்ச்சியில் பங்குபெறவைப்பதே இந்த சான்றிதழ் படிப்பின் நோக்கமாகும். ஊரக வளர்ச்சியில் பணிபுரியும் கிராமப்புறக் கல்விப்பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கும் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட ஏதுவாக இந்தப் படிப்பு அமைந்துள்ளது.