வனம் சாந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பு உதவுகிறது. வனப்பகுதி மக்களுக்கும், வன மேலாண்மை அமைப்புகளுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வனம் சார்ந்த வளங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் வன வளப்பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களிடையே விழிப்புணர்வையும், பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமான விளக்கங்கள் இந்த சான்றிதழ் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.