தோல் உற்பத்தித் துறையில் முக்கிய நாடாக விளங்கும் நமது நாட்டில் சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் தோல் பதனீட்டுத் தொழிலிலும், தோல்பொருள் உற்பத்தித் தொழிலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழுகின்றன. தோல் பதனிடுதல், காலணிகள் மற்றும் தோலாடைகள் உள்ளிட்ட தோல் பொருள்களை உற்பத்தி செய்தல், அதற்குப் பயன்படும் சாதனங்களை இயக்குதல் உள்ளிட்ட தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
தோல் பதனீட்டுக் கூடங்கள், தோல் பதனீட்டுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் ஆலைகள், தோல் ஆய்வு நிலையங்கள், தோல் தொழில் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.